புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரத்தை இழிவுபடுத்தும் நோக்க மில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று திட்டவட்டமாக கூறியது.
கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்ட விதிகளை மீறி ரூ.305 கோடி அந்நிய முதலீட்டை திரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் முன் னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்லது.
இதனிடையே, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. அடுத்த நாள் ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது சிபிஐ காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பானுபதி, ஏ.எஸ்.போபன்னா அமர்வு விசாரித்து வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளு படி செய்தனர். எனினும், அமலாக் கத் துறை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக் கில் சிதம்பரம் தரப்பு வழக்கறி ஞர்கள் நேற்று முன்தினம் வாதிட் டனர். இதையடுத்து கைது செய் வதற்கான தடையை நேற்று வரை நீட் டித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “தனது நற்பெயரை கெடுப்பதற் காகவே இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளதாக சிதம்பரம் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் கூறுவதுபோல சிதம் பரத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. சட்டவிரோத பணப்பரி வர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அத்துடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர், இப்போது சிபிஐ காவலில் உள்ளார். சிதம்பரம் மிகவும் திறமையானவர். திறமையில்லாதவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட முடியாது” என்றார்.
இதையடுத்து, விசாணையை தள்ளி வைத்த நீதிபதிகள், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை இன்றுவரை நீட்டித்து உத் தரவிட்டனர். இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.