இந்தியா

அருண் ஜேட்லி இறுதிச்சடங்கில் திருடர்கள் கைவரிசை: பாஜக எம்.பி. உள்ளிட்டோர் செல்போன்கள் கொள்ளை

செய்திப்பிரிவு

புதுடெல்லி
மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் சனிக்கிழமை பிற்பகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.

டெல்லியில் உள்ள நிகாம்போத் காட் சுடுகாட்டில் இறுதிசடங்குகள் நடந்தன. இறுதிச்சடங்கில் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர். அப்போது பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

(பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ- கோப்புப்படம்)

கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜர்வாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்‘‘அருண் ஜேட்லியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது, கூட்டத்தை பயன்படுத்தி 10-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துள்ளது.

எனது போன் மட்டுமின்றி பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ உட்பட பலரின் செல்போன்களும் திருடப்பட்டுள்ளன. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT