ஸ்ரீநகர்
காஷ்மீரின் லடாக் யூனியன் பிர தேசத்தின் எல்லை அருகே போர் விமானங்களையும் ஆயுதங்களை யும் பாகிஸ்தான் குவித்து வருகிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்திய விமானப் படை, ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனி யன் பிரதேசங்களாக பிரிக்கப்பட் டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அந்த நாடு நேற்று முன் தினம் வெளியேற்றியது. பகுதி யளவு வான் எல்லையை மூடிவிட் டது. இரு நாடுகளுக்கு இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, டெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் தலை யிடும்படி ஐ.நா. சபை, சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் முறை யிட்டு வருகிறது. ஆனால் ஐ.நா. சபையும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் பாகிஸ்தானின் கோரிக்கையை புறக்கணித்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், காஷ் மீரின் லடாக் யூனியன் பிரதேசத் தின் எல்லை அருகே ஸ்கர்து விமானப் படை தளத்தில் போர் விமானங்களையும், ஆயுதங்களை யும் பாகிஸ்தான் குவித்து வருகி றது. பாகிஸ்தானுக்கு பல ஆண்டு களுக்கு முன்னர் அமெரிக்கா வழங்கிய ‘சி-130’ ரக போக்கு வரத்து விமானங்கள் மூலம் தள வாடங்களைக் கொண்டு வந்து ஸ்கர்து விமானப் படை தளத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தளவாடங்கள் வான்வழி தாக்கு தல் நடத்துவதற்கு பயன்படக்கூடி யவை. சீனத் தயாரிப்பான ஜே.எப்17 ரக விமானங்களும் ஸ்கர்து விமான படைத் தளத்துக்கு கொண்டு வரப் பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி எல்லையில் போர் பயிற்சி நடத்த பாகிஸ்தான் விமானப்படை திட்ட மிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக் கையை இந்திய உளவுத் துறை யினரும் விமானப் படை அதிகாரி களும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எந்த சவாலையும் சந்திக்கும் வகையில் இந்திய விமானப் படை வீரர்களும் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மட்டு மன்றி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜ ராத் வான் எல்லைகள் மற்றும் கடல் எல்லைகளும் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படு கின்றன.
பக்ரீத் கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகையை ஒட்டி கடந்த 9-ம் தேதி முதல் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, பேக்கரி, மளிகை, சந்தைகள் வழக்கம்போல செயல்பட்டன. இயல்பு நிலை திரும்பியதால் காஷ்மீர் முழுவதும் நேற்று பக்ரீத் உற்சாகமாகக் கொண்டாடப் பட்டது. மசூதிகளில் தொழுகை நடைபெற்றது. எனினும் நகரில் உள்ள பெரிய மசூதிகளில் தொழுகை நடைபெறவில்லை.
போலீஸார் கூறியபோது, ‘‘காஷ் மீரில் சிறு அசம்பாவிதங்கள்கூட ஏற்படவில்லை. பக்ரீத் மிகவும் அமைதியாக கொண்டாடப்பட்டது என்று தெரிவித்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் முகாமிட்டு சட்டம், ஒழுங்கு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார். அவர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். நகரில் பதற்றமான பகுதிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட் டிருக்கிறது.
நகரின் சில இடங்களில் பாது காப்புப் படையினருக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் எச் சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் வேறு சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, பாகிஸ்தானில் முக் கிய பண்டிகை, திருவிழாக்கள் கொண்டாடப்படும்போது பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி-வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையின்போது இருநாடு களின் வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு எல்லையில் இனிப்பு பரிமாறப்படவில்லை.
வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்யக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. எனவே சுதந்திர தினம் வரை காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பக்ரீத் பண்டிகை நிறைவடைந் துள்ள நிலையில் காஷ்மீரின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் அமல் செய்யப் பட்டன. பதற்றமான பகுதி களில் 144 தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டிருக்கிறது. வரும் சுதந்திர தினம் வரை காஷ்மீரில் கட்டுப் பாடுகள் நீடிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் பாதுகாப்பு
காஷ்மீர் மட்டுமன்றி தலைநகர் டெல்லி, லக்னோ, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சுதந்திர தினத்தையொட்டி பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. டெல்லியில் செங் கோட்டை அருகே வெடிகுண்டை வெடிக்கச் செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியி ருப்பதாக உளவுத் துறை ஏற் கெனவே எச்சரிக்கை விடுத்துள் ளது. எனவே டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. என்எஸ்ஜி படையைச் சேர்ந்த வீரர்கள், ஸ்வாட் கமாண்டோ படையைச் சேர்ந்த துல்லியமாக சுடும் வீரர்கள் டெல்லியில் உயர மான கட்டிடங்களில் நிறுத்தப் பட்டுள்ளனர். டெல்லி போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. தலைநகரம் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், டெல்லி போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.