இந்தியா

ஸ்ரீநகரில் இயல்புநிலை: ஜம்முவில் ஆடுகள் வாங்க சந்தையில் கூட்டம்

செய்திப்பிரிவு

ஜம்மு

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜம்மு சந்தையில் ஆடுகளை வாங்க மக்கள் அதிகஅளவு கூடினர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப் பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பக்ரீத் பண்டி கையை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் 144 தடையுத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

மளிகை, மருந்து, காய்கறி கடைகள் திறந்துள்ளன. ஜம்மு சந்தையில் மக்கள் பொருட்களை வாங்க பெருமளவு குவிந்தனர். போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது.
ஜம்முவில் பக்ரீ்த் பண்டிகையொட்டி வழக்கமாக நடைபெறும் ஆட்டு சந்தை இன்று நடைபெற்றது. பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் வாங்க ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதேபோன்று ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.ஸ்ரீநகரில் பல இடங்களில் 144 தடை உத்தரவு விலகிக்கொள்ளப்பட்ட நிலையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

SCROLL FOR NEXT