இந்தியா

மத்திய அரசு விடுமுறை இல்லை

செய்திப்பிரிவு

அப்துல் கலாம் மறைவுக்கு மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. ஆனால் அரசு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘கலாமின் மறைவுக்காக ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். ஏழு நாட்களும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். அரசு அலுவலகங்களில் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு விடுமுறை அறிவிக்கப்படாததால் மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT