இந்தியா

வினாத்தாள் கசிவு மோசடியில் கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்றது அம்பலம்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: 2025-ம் ஆண்டு நடை​பெற்ற நீட் தேர்​வில் ஜெய்ப்​பூர் நகரிலுள்ள ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்​றுள்ள தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இவர்​கள்​தான் இந்த ஆண்டு நீட் வினாத்​தாளை கசிய விட்​டது தொடர்​பாக கைது செய்யப்பட்டவர்​கள் என்று போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் உள்​ளிட்ட மருத்​து​வப் படிப்​பு​களில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்​தேர்வு அவசி​யம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஒவ்​வொரு ஆண்​டும் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​த​தால் அந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், நீட் மறுத்​தேர்​வுக்கு மாணவர்​கள் புதி​தாக விண்​ணப்​பிக்க தேவை​யில்லை என்​றும் விளக்​கம் அளிக்கப்​பட்​டுள்​ளது.

மறு​தேர்​வுக்​கான புதிய ஹால் டிக்​கெட் மற்றும் தேர்வு மையங்​கள் குறித்த விவரங்​கள் விரை​வில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக விரிவான விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகா​ராஷ்டிர மருத்​துவ மாணவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். மேலும், விசாரணைக்​காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதனிடையே, நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளியே வந்து கொண்​டிருக்​கின்​றன. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து கடந்த ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்கியது தெரிய​வந்​துள்​ளது. இவர்​களில் ஒரு​வர், சிகார் பகுதியில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார்.

பின்​னர் ஏப்​ரல் 29-ம் தேதி அவர்​கள் அந்​தத் தாளை பலருக்கு விற்றுள்​ளனர். ஜெய்ப்​பூர் அருகே உள்ள ‘சி​கார்' பகு​தி, இந்த வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மையப்​புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. சிகாரில் உள்ள எம்​பிபிஎஸ் ஆலோ​சனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்​ட​வாரியா என்​பவர் அந்​தத் தாளை வாங்​கி, கேரளாவில் எம்​பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒரு​வருக்கு ரூ.30,000-க்கு விற்​றுள்​ளார். மேலும், அந்த மாணவர் தேர்​வுக்கு முந்தைய நாள் தனது தந்​தைக்கு (சி​காரில் விடுதி நடத்​துபவர்) அந்​தத் தாளை அனுப்​பி​யுள்​ளார். அவர் தனது விடு​தி​யில் தங்கியிருந்த மாணவி​களுக்கு அதனைப் பகிர்ந்​துள்​ளார். இந்த வழக்​கின் முக்​கிய நபராக குரு​கி​ராம் மருத்​து​வர் கருதப்படுகிறார்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான தினேஷ் பிவாலுக்கு ஓர் அரசி​யல் கட்​சி​யுடன் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதனிடையே கடந்த 2025-ம் ஆண்​டில் ராஜஸ்​தானின் மங்​கிலால் மற்​றும் தினேஷ் பிவால் குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்​வில் வெற்றி பெற்​றுள்ள தகவலும் அம்​பல​மாகி​யுள்​ளது. மேலும் இவர்கள் 5 பேரும் பிரபல​மான மருத்​து​வக் கல்​லூரி​களில் சேர்ந்து படித்து வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் 6-ம் தேதி ஃபேஸ்புக் சமூக வலை​தளத்​தில் ஒரு தகவலை தினேஷ் பிவால் பதிவு செய்​துள்​ளார். அதில் ‘‘எங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்த ஐந்து பேர், அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் (எம்​பிபிஎஸ்) பயிலத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருப்​பது, எங்​கள் குடும்​பத்​துக்​குப் பெரு​மைக்​குரிய ஒரு விஷய​மாகும். அந்த பிள்​ளை​கள் அனை​வருக்​கும் ஒரு பொன்னான எதிர்​காலம் அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்’’ என்று தினேஷ் பிவால் பதிவு செய்​துள்​ளார்.

ஓராண்டு கழிந்​துள்ள நிலை​யில் தற்​போது வினாத்​தாள் கசிவு வழக்​கில் தினேஷ் பிவால் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அவருடன் மங்​கிலால், மங்​கிலாலின் மகன் விகாஸ் ஆகியோ​ரும் போலீ​ஸின் பிடி​யில் சிக்​கி​யுள்​ளனர். மங்​கிலால் மகன் விகாஸ், நீட் தேர்​வில் 85.11 சதவீத மதிப்​பெண் பெற்று சவாய் மாதோப்​பூர் மருத்​து​வக் கல்​லூரி​யில் சேர்ந்​துள்​ளார். அவர் 2024 நீட் தேர்​வில் 720 மதிப்பெண்​களுக்கு வெறும் 270 மதிப்​பெண் மட்​டுமே பெற்றிருந்தார்.

அதே​போல் மங்​கிலாலின் மகள் பிரக​தி, டவுசா மருத்​து​வக் கல்லூரி​யில் 2025-ல் சேர்ந்​துள்​ளார். நீட் தேர்​வில் அவர் 89.08 சதவீத மதிப்​பெண் பெற்​றார். ஆனால் இவர் 2024 நீட் தேர்​வில் 332 மதிப்​பெண் மட்​டுமே பெற்​றிருந்​தார். 2024 நீட் தேர்​வில் தினேஷ் பிவாலின் மகள் கன்​ஜன் 355 மதிப்​பெண்​கள் மட்​டுமே பெற்ற நிலை​யில், 2025 தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்று வாராணசியிலுள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்ந்​துள்​ளார்.

பிவால் குடும்​பத்​தைச் சேர்ந்த மற்​றொரு சகோ​தர​ரான கன்ஷியாமின் மகள் சானி​யா, 2025 நீட் தேர்​வில் 94.07 சதவீத மதிப்​பெண் பெற்று மும்பை அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் சேர்ந்துள்​ளார். கன்​ஷி​யாமின் மற்​றொரு மகள் பாலக், 2025 நீட் தேர்​வில் 98.61 சதவீத மதிப்​பெண் பெற்று ஜெய்ப்​பூர் அரசு மருத்துவக் கல்​லூரி​யில் சேர்ந்​துள்​ளார். இவர் 2024 நீட் தேர்​வில் 512 மதிப்​பெண்​கள் மட்​டுமே எடுத்​திருந்​தார்.

இவர்​கள் 5 பேருமே முந்​தைய நீட் தேர்​வில் குறைந்த அளவு மதிப்​பெண்​கள் மட்​டுமே எடுத்த நிலை​யில் 2025 நீட் தேர்​வில் அதிக அளவில் மதிப்​பெண்​களைக் குவித்து அனை​வருமே அரசு மருத்துவக் கல்​லூரி​களில் சேர்ந்​துள்​ளனர். தினேஷ் பிவால், மங்கிலால் ஆகியோர் கைதாகி​யுள்ள நிலை​யில், கடந்த ஆண்​டும் நீட் வினாத்​தாள் கசிந்​திருக்​குமா என்​பது குறித்து அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஆனால் கடந்த நீட் தேர்​வில் வினாத்​தாள் கசிந்​தது தொடர்​பாக இது​வரை எந்த அதி​காரப்​பூர்வ புகாரும் வரவில்​லை. இந்த விவகாரத்​தில் சிக்​கி​யுள்​ள ​நாசிக்​கைச்​ சேர்​ந்​த ஷுபம்​ கைர்​​னார், புனேவைச்​ சேர்​ந்​த ​யாஷ் ​யாதவ்​ ஆகியோரிடம்​ சிபிஐ அதிகாரிகள்​ தொடர்​ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​. இதில்​ ​யாஷ் யாதவ்​​தான்​, நீட்​ வி​னாத்​​தாளை பி​வால்​, மங்​கிலால்​ குடும்பத்தாருக்​கு கொடுத்​தது தெரியவந்​துள்​ளது.

SCROLL FOR NEXT