துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத குழுக்களுக்காகப் பணியாற்றுவதாக கண்டறியப்படும் அரசு ஊழியர்களை துணை நிலை ஆளுநர் நிர்வாகம் பணி நீக்கம் செய்து வருகிறது.
கடந்த 2021-ல் இந்த நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவரை பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 85 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 5 அரசு ஊழியர்களுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று பணி நீக்கம் செய்தார்.