நாடு முழுவதும் சேவை வரி உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதையடுத்து செல்போன், ஓட்டல், ஏசி ரயில், விமான கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளன.
சேவை வரி தற்போது 12.36 சதவீதமாக உள்ளது. இது மத்திய பட்ஜெட்டில் 14 சதவீதமாக அதி கரிக்கப்பட்டது. இந்த வரி உயர்வு நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தது.
இதனால் செல்போன், ஏசி ரயில், விமானம், வங்கிச் சேவை, இன்சூரன்ஸ், விளம்பரம், கட்டு மானம், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி மேலாண்மை ஆகிய சேவை களுக்கான கட்டணம் உயர்ந் துள்ளது.
ரயில்களில் குளிர்சாதன வசதி யுள்ள ஏசி சேர் கார், ஏசி முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்புக்கான கட்டணம் அதிகரிக் கிறது. டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்ப ரூ.1000-க்கு ரூ.16 என்ற வகையில் கட்டண உயர்வு இருக்கும், சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது, சரக்கு கட்டணம் 0.5% சதவீதம் அதிகரிக் கப்படுகிறது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் சேவை வரி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஏசி வசதி கொண்ட உயர்ரக ஓட்டல்களில் இனிமேல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இசை, நடனம், பொழுதுபோக்கு பூங்காக்கள், சிட்பண்ட், இன்சூரன்ஸ் பிரிமியம், டி.டி.எச். சேவை, அழகு நிலையங்கள், கூரியர் சேவை, சுற்றுலா பயண டிக்கெட் ஆகியவற்றுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.