சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நேற்று நக்ஸல் தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். மேலும் இரு காவலர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தந்தேவாடா எஸ்.பி. கம்லோச்சன் காஷ்யப் கூறியதாவது:
கீதம் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தும்னார் கிராமத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மூன்று போலீஸார் மளிகைப் பொருட்கள் வாங்க அங்கு நடைபெறும் வாரச் சந்தைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதில் மங்ளூ மந்தாவி எனும் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். ராம்லால் மற்றும் முன்னாராம் ஆகிய இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு காவலர் கள் விரைந்து சென்று, மந்தாவியின் உடலை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய புத்ராம் எனும் நக்ஸலைக் கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.