இந்தியா

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 104 சேவை மையத்தில் உளவியல் ஆலோசனை

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு தேர்வில் தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் காரணங்களால் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மாணவ, மாணவிகள் எடுப்பதை தடுக்கப்பதற்காக ’104’ மருத்துவ உதவி சேவை மையத்தின் மூலம் உளவியல் ஆலோசனை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ‘104’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரசு மனநல டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

          
SCROLL FOR NEXT