ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இரும்பு தொழிற்சாலை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. பின்னர் ஆலையை சுற்றிப் பார்த்த அவர் பல்வேறு விவரங்களை ஆலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இன்று மாலை அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் மாநில ஆளுநர் ஜமீர், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.