இந்தியா

அசாமில் போலீஸ் முகாம் மீதான தாக்குதலில் 4 பேர் காயம்

செய்திப்பிரிவு

தின்சுகியா: அசாம் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதற்​காக அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்படுத்​தப்​பட்டுள்ளன.

இந்​நிலை​யில் தின்​சுகியா மாவட்​டத்​தின் ஜகுன் பகு​தி​யில் போலீஸ் கமாண்​டோ முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த இடம் அசாம் - அருணாச்​சலப் பிரதேசம் எல்​லை​யில் அமைந்​துள்​ளது. இங்கு நேற்று அதி​காலை 2 மணி​யள​வில் சிலர் கண்​ மூடித்​தன​மாக துப்​பாக்கி சூடு நடத்​தி, 5 கையெறி குண்​டு​களை வீசினர். இதில் 4 போலீ​ஸார் காயம் அடைந்​தனர். அவர்​கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்​டனர்.

          
SCROLL FOR NEXT