நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறை கேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா விடம் அமலாக்கத்துறை அதிகாரி கள் நேற்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்காக கொல் கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மதுகோடா நேற்று காலை 10 மணியளவில் ஆஜரானார். நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மதுகோடாவுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது மீண்டும் விசாரணை நடைபெற்றுள்ளது.