குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார். இது தொடர்பாக சோனியா கூறியுள்ளது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளின் மறுசீரமைப்பாகவே குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள அறிவிப்புகள் இருக்கின்றன. புதிய விஷயங்கள் எதுவும் அதில் இல்லை என்றார்.