இந்தியா

உத்தர பிரதேசத்தில் 2025-ல் 2,739 என்கவுன்ட்டர்கள்: 48 முக்கிய குற்றவாளிகள் உயிரிழப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்​தி​யா​வில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நடை​பெறும் மாநிலங்​களில் உ.பி. முக்​கிய இடத்​தைப் பிடித்​திருந்​தது.

இம்​மாநிலத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக ஆட்சி அமைந்த பிறகு குற்​றங்​களின் எண்​ணிக்கை குறைந்துள்​ள​தாக கருதப்​படு​கிறது. இதற்கு குற்​ற​வாளி​களுக்கு எதி​ரான என்-​க​வுன்ட்​டர்கள காரண​மாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் உ.பி. காவல் துறை இயக்​குநர் ராஜீவ் கிருஷ்ணா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: "உ.பி.​யில் 2025ம் ஆண்​டில் மட்​டும் 2,739 என்​க​வுன்ட்​டர்​களை காவல் துறை நடத்தி உள்​ளது. இவை அனைத்​தும் சட்​டத்​துக்கு உட்​பட்டு நடத்​தப்​பட்​டன. இதில் 3,153 குற்​ற​வாளி​கள் காயமடைந்​தனர். ஒரு காவலர் வீரமரணம் அடைந்​தார். உ.பி.​யின் 48 முக்​கிய குற்​ற​வாளி​கள் கொல்லப்பட்டுள்​ளனர். முந்​தைய 8 ஆண்​டு​களு​டன் ஒப்பிடுகையில் இதுவே அதிக எண்​ணிக்கை ஆகும்.

உ.பி.​யில் கடந்த 2017 மார்ச் 20-ம் தேதி தொடங்கி 2025 டிசம்​பர் 29ம் தேதி வரை மொத்​தம் 266 குற்​ற​வாளி​கள் என்கவுன்ட்டர்களில் கொல்​லப்​பட்​டுள்​ளனர். 2018-ல் 41, 2019-ல் 34, 2020 மற்​றும் 2021-ல் தலா 26 என குற்​ற​வாளி​கள் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2025-ல் சட்​ட​விரோத மத மாற்​றம் தொடர்பாக 475 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 855 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதில் 379 வழக்​கு​களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

பசு கடத்​தல் மற்​றும் பசு வதைக்கு எதி​ராக 1,197 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 3,128 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதில் 958 வழக்கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் 1,886 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்​பட்​டு, ரூ.7.38 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

2025-ல் திருட்​டு, கொள்ளை மற்​றும் வழிப்​பறி வழக்​கு​களில் 8,543 இருசக்கர வாக​னங்​கள், 911 நான்கு சக்கர வாக​னங்​களை காவல்துறை மீட்​டுள்​ளது. ரூ.28.69 கோடி ரொக்​கம், ரூ.52.27 கோடி மதிப்புள்ள நகைகள் மற்​றும் ரூ.58.17 கோடி மதிப்​புள்ள பிற சொத்துகளை பறி​முதல் செய்​துள்​ளது. இவ்​வாறு ராஜீவ் கிருஷ்ணா கூறி​னார்​.

SCROLL FOR NEXT