ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நிர்வாக சீர்கேட்டினாலும் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக அதிக அளவில் ஓட்டுகள் பெற்று தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் அத்வானி நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜ கட்சிக்கு இப்போது எழுந்துள்ள அளவு ஆதரவு இதற்கு முன்பு மக்கள் மத்தியில் தான் கண்டது இல்லை என்றும் அத்வானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மிகவும் சொற்ப அளவிலேயே வாக்குகள் கிடைக்கும் என்றார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.