நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கியது. ஒருமாத காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்றுவந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.
இதனையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் குறிப்பிடத்தக்க அளவு அலுவல்கள் நிறைவேறியதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.