மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 32,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
இதன் விளைவாக சென்செக்ஸ் குறியீட்டு எண் முதல் முறையாக 32,000 புள்ளிகளை எட்டியுள்ளது. மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9,879 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.