கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தில் முதல்முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி இஸ்லாமியர்களுக்கு சைவ இப்தார் விருந்து அளிக்கப்பட்டது.
ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமியை கண்டித்து கடந்த 2-ம் தேதி கர்நாடகா முழு வதும் போராட்டம் நடத்தினார். பல்வேறு இந்துத்துவ அமைப் பினர் பங்கேற்ற இந்த போராட் டத்தின்போது பெஜாவர் மடத் துக்கு எதிராகவும், மடாதிபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பெங்களூருவில் மவுரியா சதுக்கத்தில் நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஹை - கிரவுண்ட் போலீஸார், ஊடக செய்திகளின் அடிப்படையில் தாமாக முன் வந்து ராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 153 (ஏ) (இரு பிரிவினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவது), 295 (ஏ) மத உணர்வை புண்படுத்தி பகையை ஏற்படுத்துவது, 506 (குற்றச் செயலுக்குத் தூண்டி விடுவது) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.