இந்தியா

மத்திய அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் கேஜ்ரிவால் மனைவி சுனிதா

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா வருமான வரித்துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய வருவாய் பணிகள் அதிகாரியான சுனிதா, கடந்த 22 ஆண்டுகளாக வருமான வரித் துறையின் பல்வேறு பொறுப்பு களை வகித்துவந்தார்.

கடைசியாக டெல்லியில் உள்ள வருமான வரிகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஆணையாளராக இருந்த நிலையில், தாமாக முன்வந்து விருப்ப ஓய்வு கோரி விண் ணப்பித்திருந்தார்.

இதை ஏற்று, அவரை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அதி காரப்பூர்வ உத்தரவை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT