இந்தியா

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு

ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்​மு-​ காஷ்மீரின் உதம்​பூர் மாவட்​டத்​தில் நேற்று பேருந்து ஒன்று மலைப் பள்​ளத்​தில் உருண்டு விழுந்​த​தில், 21 பேர் உயிரிழந்தனர். படு​காயமடைந்த 29 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஜம்மு காஷ்மீரின் உதம்​பூர் மாவட்​டம் ராம்​நகரில் இருந்து நேற்று காலை​யில் புறப்​பட்ட ஒரு பேருந்து உதம்​பூர் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. காலை 10 மணி​யள​வில் ககோர்ட் கிராமத்​துக்கு அருகே மலைப்​பாங்​கான பகு​தி​யில் சென்ற அந்​தப் பேருந்து ஒரு குறுகிய வளை​வில் திரும்ப முயன்​ற​போது நிலை தடு​மாறி பள்ளத்தில் விழுந்து விபத்​துக்​குள்​ளான​தாகக் கூறப்​படு​கிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு முதலில் சென்ற அப்​பகுதி மக்​கள், சேதமடைந்த பேருந்​துக்​குள் இருந்து காயமடைந்​தவர்​களை மீட்​கும் பணி​களைத் தொடங்​கினர். அதனைத் தொடர்ந்து காவல் துறை மற்​றும் அவசரக்​கால மீட்​புக் குழு​வினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​து, பாதிக்கப்பட்டவர்களை வெளி​யேற்​றும் பணி​களில் ஈடு​பட்​டனர்.

பேருந்து இடி​பாடு​களுக்​குள் இருந்து மொத்​தம் 21 உடல்​கள் மீட்கப்பட்​டன. படு​காயமடைந்த 29 பேர் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர், அவர்​களில் பலருடைய நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர். பயணி​களை அதிக அளவில் ஏற்றி வந்த பேருந்து ஒரு ஆட்டோ ரிக்சா மீது மோதி பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தாக முதற்கட்ட விசா​ரணை​யில் தெரிய​ வந்​துள்​ளது.

பிரதமர் மோடி இரங்​கல்: பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்தில் வெளி​யிட்ட பதி​வில், "உதம்​பூரில் நடந்த பேருந்து விபத்து குறித்த செய்தி அறிந்து வேதனை அடைந்​தேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்​துக் கொள்​கிறேன். காயமடைந்​தவர்​கள் குணமடைய பிரார்த்​தனை செய்​கிறேன். விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்பத்​தினருக்கு பிரதமர் நிவாரண நிதியி​லிருந்து ரூ.2 லட்​சம் வழங்​கப்​படும். காயமடைந்தவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என கூறப்பட்​டுள்​ளது.

இதனிடையே, விபத்தில் படு​காயமடைந்​தவர்​களை விமானம் மூலம் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்ல உத்​தர​விட்டுள்ளதாக மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT