இந்தியா

மம்தாவுக்கு எதிரான திரிணமூல் எம்.பி.க்கள் 20 பேர் தேசியவாத சிட்டிசன்ஸ் கட்சியில் இணைய முடிவு

மக்களவையில் தனி இடம் கோரி சபாநாயகரிடம் கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் 20 பேர், திரிபுராவைச் சேர்ந்த தேசி​ய​வாத சிட்​டிசன்ஸ் கட்​சி​யில் இணை​ய​ உள்​ளனர்.

மேற்​கு​ வங்க சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்​வியை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் எம்​.எல்​.ஏ.க்​கள் மற்​றும் எம்.பி.க்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்​கொடி தூக்​கினர். மம்தா பானர்ஜியின் மருமகனும் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் சர்வா திகார போக்கால்தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகள் பலர் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணி​யாக பிரிந்து எதிர்க்​கட்சி அந்தஸ்தை பெற்​றனர். இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி​யில் 20 மக்​களவை எம்​.பி.க்​கள் தனி அணி​யாக செயல்பட முடிவு செய்​தனர். இவர்​களை அங்​கீகரிக்க வேண்​டாம் என திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு கடிதம் அனுப்​பி​னார்.

இதையடுத்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் போர்க்​கொடி தூக்கிய 20 எம்​.பி.க்​கள் ககோலி கோஷ் தாஸ்​திதர் தலை​மை​யில் சபா​நாயகரை சந்​தித்து தனி அணி​யாக மக்​களவை​யில் அமர கடிதம் அளித்​தனர். இவர்​கள் திரிபு​ராவைச் சேர்ந்த தேசி​ய​வாத சிட்​டிசன்ஸ் கட்​சி​யில் இணைந்து தே.ஜ. கூட்​ட​ணியை ஆதரிக்க முடிவு செய்​துள்​ளனர்.

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் 3-ல் 2 பங்கு எம்​.பி.க்​கள் பிரிந்துள்​ள​தால் அடுத்த மாதம் தங்​களுக்கு திரிண​மூல் காங்கிரஸ் கட்சி அந்​தஸ்தை வழங்க நீதி​மன்​றத்​தில் மனு செய்யவுள்​ள​தாக எம்​.பி. சுதீப் பந்​தோபத்​யாய்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT