இந்தியா

பிஹாரில் 2 பெண் நடன கலைஞர்களை கடத்தி 13 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் 2 பெண்​களைக் கடத்தி, துப்​பாக்கி முனையில் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

ஜார்க்​கண்ட் மாநிலம் லாத்​தேஹர் மாவட்​டத்​தைச் சேர்ந்த உறவினர்​களான இரண்டு பெண்​கள், பிஹார் தலைநகர் பாட்னாவின் மிதாபூர் பகு​தி​யில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நடனக் கலைஞர்​களாகப் பணி​யாற்றி வந்​தனர். இந்த நிலை​யில், நவ்​பத்​பூர் காவல் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​யில் நடை​பெற்ற ‘திலகம்' சடங்கு விழா​வில் நடன​மாடு​வதற்​காக, முன்னா குமார் என்​பவ​ரால் இந்த இரு பெண்​களும் முறைப்​படி அழைக்கப்பட்டிருந்​தனர்.

இதற்​காகப் புறப்​பட்ட பெண்​களை, விழா நடக்​கும் இடத்​திற்கு அழைத்​துச் செல்​லாமல், சிலர் திட்​ட​மிட்டு தனிமை​யான இடத்திற்கு கடத்​திச் சென்​றுள்​ளனர். காவல்​துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்​கை​யின்​படி, கடத்​தப்​பட்ட அந்த இரு பெண்​களும் தனித்​தனி இடங்​களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். பின்​னர், துப்​பாக்கி முனை​யில் சுமார் 13 பேர் கொண்ட கும்​பலால் அந்​தப் பெண்​கள் இரவு முழு​வதும் அடுத்​தடுத்து கூட்​டுப் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்கு அந்​தப் பெண்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​போது, அவர்​களைக் கொடூர​மாகத் தாக்​கி, கொலை மிரட்​டலும் விடுத்​துள்​ளனர். மறுநாள் காலை​யில், பாதிக்​கப்​பட்ட பெண்​கள் இரு​வரும் ஒரு வாக​னத்​தில் ஏற்​றிச் செல்​லப்​பட்​டனர். அந்த வாக​னம் புல்​வாரி ஷெரீப் காவல் நிலை​யப் பகு​தியை அடைந்​த​போது, தங்​களுக்கு நேர்ந்த கொடூரத்தை வெளி​யில் சொல்ல நினைத்த பெண்​கள், வாக​னத்​திற்​குள் இருந்​த​படியே கூச்​சலிட்​டனர். சத்​தம் கேட்டு உஷா​ரான அப்​பகுதி பொது​மக்​கள், உடனடி​யாக காவல்துறையினருக்​குத் தகவல் கொடுத்​தனர்.

இது குறித்து புல்​வாரி ஷெரீப் துணை கோட்ட போலீஸ் அதி​காரி தீபக் குமார் கூறுகை​யில், "பெண்​கள் இரு​வர் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்ட தகவல் கிடைத்த உடனே, முதற்​கட்​ட​மாக ஜீரோ எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது. பின்​னர் மேல் விசா​ரணைக்​காக அது நவ்​பத்​பூர் காவல் நிலை​யத்​திற்கு மாற்​றப்​பட்​டது. குற்​ற​வாளி​களில் முன்னா குமார், சூரஜ் குமார் மற்​றும் பானு குமார் ஆகிய மூன்று பேர் அடை​யாளம் காணப்பட்டுள்​ளனர். தலைமறை​வாக உள்ள மற்​றவர்​களைப் பிடிக்க சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டு, தீவிர தேடுதல்​ வேட்​டை நடை​பெற்​று வரு​கிறது" என்​றார்​.

SCROLL FOR NEXT