பரிதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த சகோதரர்கள் அகிலேஷ் (29), அவதேஷ் (27). இவர்கள் இருவரும் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மங்கர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
ரக் ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடுவதற்காக இவர்களது சகோதரிகள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை பரிதாபாத் வந்தனர். அங்கு அவர்கள் தங்களின் இரு சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி ரக் ஷா பந்தனை கொண்டாடினர்.
பின்னர் மறுநாள் காலையில் இவர்கள் 4 பேரும் பேருந்துக்காக காத்திருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உயிரிழந்தனர்.