அரவிந்த் கேஜ்ரிவால் மீது பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பை பிப்ரவரி 28-க்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை ஊழல்வாதி என விமர்சித்திருந்தார்.
இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா, இவ்வழக்கில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.