இந்தியா

சிபிஐ செயல்பாட்டில் அரசு தலையிடுவதில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

பிடிஐ

சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவதில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதுபோல, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 22 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக, கடந்த 3 ஆண்டுகளாக நேர்மையான, ஊழலற்ற அரசை நடத்தி வருகிறது. மேலும் திறமை யான ஒரு தலைவரின் கீழ் ஏழை களுக்கு சாதகமான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு சிபிஐ அமைப்பை ஏவி விட்டிருப்ப தாக சிதம்பரம் கூறியுள்ள குற்றச் சாட்டு தவறானது. புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல் படுகின்றன. அவற்றின் செயல்பாடு களில் மத்திய அரசு தலையிடுவ தில்லை.

அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய (எப்ஐபிபி) பயனாளியான ஐஎன்எக்ஸ் மீடியா, சிதம்பரம் மகன் நிறுவனத்துக்கு பணம் வழங்கியது ஏன்? தனது மகனின் செயல்பாடுகளுக்கும் சிதம்பரம் பொறுப்பேற்க வேண்டும். இந்த நாள் ஊழல்வாதிகளை பொறுப்பு டைமையாக்கும் நாள் ஆகும்.

காங்கிரஸ் கட்சி தனது தோல்விக் கான காரணத்தை சுயபரிசோதனை செய்வதற்கு பதிலாக, மத்திய அரசின் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை கூறி வருகிறது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT