இந்தியா

திருப்பதியில் செம்மரம் கடத்தல் 9 தமிழர்கள் உட்பட 17 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பதியில் செம்மரம் கடத்திய தாக நேற்று 9 தமிழர்கள் உட்பட 17 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக வந்த தகவலின்பேரில், நேற்று காலை திருப்பதி-கடப்பா நெடுஞ்சாலை யில் அலிபிரி போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் போலீஸாரை கண்டதும் நிற்காமல் வேகமாக தப்பிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது இருவரும் செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் செம்மரங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை இருவரும் அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் அவ்வழியாக வந்த 3 வாகனங்களை மடக்கிப் பிடித்து, அதில் கடத்தப்படவிருந்த 500 கிலோ செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9 தமிழர்கள் உள்பட 17 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT