மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவீதமாக உள்ள அகவிலைப் படி 107 சதவீதமாக உயரும்.
2013 ஜூலை 1 முதல் 2014 ஜூன் 30 வரையிலான ஓராண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கான சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனை அடிப் படையாகக் கொண்டு அகவிலைப் படியை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற் றும் 30 லட்சம் ஊழியர்களும் 50 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள்.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியபோது, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக போராடி வருகிறோம். ஆனால் அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது என்றார்.