புதுடெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை 74 நாட்களில் நாடு முழுவதும் 170 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. கடந்த 2024- 25ல் 140 லாக்கப் மரணங்களும், 2023- 24ல் 157 லாக்கப் மரணங்களும், 2022- 23ல் 163 லாக்கப் மரணங்களும், 2021- 22ல் 176 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.