ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக நேற்று ஸ்ரீநகர் சென்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று அவர்கள் சுற்றுப் பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. சோனியாவும் ராகு லும் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவை சந்தித்து நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிய உள்ளனர். இன்று அவர்கள் ஜம்மு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளனர்.