இந்தியா

‘இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம்’ ஆன இந்தூரில் அசுத்தமான குடிநீரால் 14 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் அசுத்​த​மான குடிநீரை பரு​கிய​தால் 7 பேர் இறந்​த​தாக மாநகர் மேயர் அறி​வித்த நிலை​யில் 14 பேர் வரை இறந்​துள்​ள​தாக உள்​ளூர் மக்​கள் தெரி​வித்​தனர்.

இந்​தூரில் உள்ள பாகீரத்​புரா பகு​தி​யில் ஒரு பொதுக் கழிப்​பறைக்கு அடி​யில் சென்ற குடிநீர் குழா​யில் கசிவு ஏற்​பட்​ட​தில் குடிநீருடன் கழி​வுநீர் கலந்​துள்​ளது. இந்த தண்​ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்​றும் வயிற்​றுப்​போக்கு ஏற்​பட்​டு, பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்​தி​யா​வின் தூய்​மை​யான நகர​மாக இந்​தூர் தொடர்ந்து தேர்வு செய்​யப்​பட்டு வரும் நிலை​யில் அங்கு நடை​பெற்ற இந்த சம்​பவம் அதிர்ச்சி மற்​றும் கவலையை ஏற்​படுத்​தி​யது. ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் நேற்று முன்​தினம் மருத்​து​வ​மனை​களில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​தார். அவர்களுக்கு வழங்​கப்​படும் சிகிச்சை குறித்து கேட்​டறிந்​தார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இந்​தப் பிரச்​சினை​யில் 2-3 நாட்​களில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. 40 ஆயிரத்​துக்கு மேற்​பட்​டோருக்கு மருத்​து​வப் பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது. மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 212 பேரில் 4 பேர் இறந்​தனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்​பினர். 62 பேர் சிகி​ச்​சை​யில் உள்​ளனர்” என்​றார்.

இதற்கு அடுத்த சில மணி நேரத்​தில் மாநகர மேயர் புஷ்யமித்ரா பார்​க​வா, நோயாளி​களில் சிகிச்சை பலனின்றி 7 பேர் இறந்​த​தாக உறுதி செய்​தார். இந்​நிலை​யில் இத்​துயர சம்​பவத்​தில் 6 மாத குழந்தை உட்பட இது​வரை 14 பேர் இறந்​துள்​ள​தாக உள்​ளூர் மக்கள் நேற்று தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மாநில அமைச்​சர் கைலாஷ் விஜய்​வர்​கியா நேற்று கூறுகை​யில், “இறப்பு எண்​ணிக்கை மாறு​பாடு குறித்து நாங்​கள் சரி​பார்ப்​போம். மக்​கள் கூறு​வது சரி​யாக இருந்​தால் முதல்​வர் அறி​வித்​த​வாறு அவர்​களின் குடும்​பத்​தினருக்​கும் நிதி​யுதவி வழங்​கு​வோம்” என்​றார்.

இதற்​கிடை​யில் பாகீரத்​பு​ரா​வில் குடிநீர் குழா​யில் ஏற்​பட்ட கசிவு சரிசெய்​யப்​பட்டு குடிநீர் விநி​யோகம் மீண்​டும் தொடங்​கி​உள்​ள​தாக அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT