இந்தியா

40 கோடி மக்களுக்கு மின் வசதி இல்லை

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 40 கோடி மக்களுக்கு மின் வசதி இல்லை, அவர்களுக்கு விரைந்து மின் இணைப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் அவர் கூறியதாவது: ராஜீவ் காந்தி கிராமின் வித்யூதிகரன் யோஜனா திட்டத்தில் மின் இணைப்பு வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங் களில் இத்திட்டம் முழுமை பெறவில்லை. நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இதன்படி சுமார் 40 கோடி மக்கள் மின்வசதி இன்றி உள்ளனர். அவர்களுக்கு விரைந்து மின்இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT