புதுடெல்லி: நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த 4 வாரங்களுக்குள்வழிகாட்டு செயல்முறைகளை உருவாக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ‘விலங்குகள் கருத்தடை விதிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
அதேபோல, தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்கும் இந்த பிரச்சினை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த வழக்கில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், கால்நடை பராமரிப்பு,உள்ளாட்சி ஆகிய துறை செயலர்கள் பதில் அளிக்க வேண்டும். அத்துடன் விலங்குகள் கருத்தடை விதிகளை செயல்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பல மாநிலங்கள் பதில் அளித்தன. பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிகடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராகினர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் தெரு நாய்கள் பல்வேறு பகுதிகளிலும் குழந்தைகள், அப்பாவி மக்களை கடித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட உத்தர வுகள் பிறப்பிக்கப்படுகின்றன.