இந்தியா

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, உச்ச நீதி​மன்​றமே தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. ‘விலங்​கு​கள் கருத்​தடை விதி​கள் நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன.

அதே​போல, தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்​கும் இந்த பிரச்​சினை ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் இருக்க வாய்ப்​பு உள்​ளது.எனவே, இந்த வழக்​கில் மாநிலங்​கள், யூனியன் பிரதேச அரசுகள், கால்​நடை பராமரிப்​பு,உள்​ளாட்சி ஆகிய துறை செயலர்​கள் பதில் அளிக்க வேண்​டும். அத்​துடன் விலங்​கு​கள் கருத்​தடை விதி​களை செயல்​படுத்த எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகளை அறிந்து கொள்ள வேண்​டும்’ என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த வழக்​கில் பல மாநிலங்​கள் பதில் அளித்​தன. பதில் மனு தாக்​கல் செய்​யாத மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படிகடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராகினர். இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்​றம் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​களின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக மாறி வரும் தெரு நாய்​கள் பல்வேறு பகுதிகளிலும் குழந்​தைகள், அப்பாவி மக்களை கடித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை கருத்​தில் கொண்டு கீழ்க்​கண்ட உத்​தர​ வு​கள் பிறப்​பிக்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT