தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 கொலையாளிகள் 
இந்தியா

சித்தூர் மேயர் கொலையில் 5 பேருக்கு தூக்கு

என். மகேஷ்குமார்

சித்தூர்: சித்​தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்​கில் 5 பேருக்கு தூக்கு தண்​டனை விதிக்​ககப்​பட்டு உள்​ளது. சித்​தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்​சி​யின் துணைத் தலை​வர் கட்​டாரி மோகன். இவரது மனைவி அனு​ரா​தா. இவர், சித்​தூர் மாநக​ராட்​சி​யின் முதல் மேயர் ஆவார்.

கட்​டாரி மோக​னின் அக்கா மகன் சிண்​டு. இவர்​களுக்​கிடையே அரசி​யல், பொருளா​தா​ர ரீ​தி​யான மோதல்​கள் நீடித்து வந்​தன. மேலும் சிண்​டு​வுக்கு தாய் மாமா​வான கட்​டாரி மோகன் பெண் தர மறுத்து விட்​டார் என்று கூறப்​படு​கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்​பர் 17-ம் தேதி சித்​தூர் மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் மேயர் அனு​ராதா பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அவரது கணவர் கட்​டாரி மோகன் பக்​கத்து அறை​யில் கட்​சிக்​காரர்​களு​டன் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது சிண்டு உட்பட 5 பேர், பர்தா உடை அணிந்து மாநக​ராட்சி அலு​வல​கத்​துக்​குள் நுழைந்​து மேயர் அனு​ரா​தா, கட்​டாரி மோக​னை​ துப்​பாக்​கி​யால் சுட்​டு கொன்று விட்டு தப்பினர்.

இது குறித்து சித்​தூர் முதலா​வது போலீஸ் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. சித்​தூர் கூடு​தல் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. மொத்​தம் 23 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதில் கோசரம் ரமேஷ் என்​பவர் வழக்​கில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். ஸ்ரீநி​வா​சாச்​சாரி என்​பவர் உயி​ரிழந்​தார். எஞ்சிய 21 பேர் மீது தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்​றது.

இறு​தி​யில் ஸ்ரீ​ராம் சந்​திரசேகர் என்​கிற சிண்​டு, வெங்​க​டாசலபதி என்​கிற வெங்​கடேஷ், ஜெயப்​பிர​காஷ் என்​கிற ஜெயா ரெட்​டி, மஞ்​சு​நாத் என்​கிற மஞ்​சு, முனிரத்​தினம் வெங்​கடேஷ் ஆகிய 5 பேர் குற்​ற​வாளி​கள் என்று சில நாட்​களுக்கு முன்பு தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. எஞ்சிய 16 பேர் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து குற்​ற​வாளி​களுக்​கான தண்​டனை விவரத்தை சித்​தூர் மாவட்ட கூடு​தல் நீதி​மன்ற நீதிபதி நி​வாச ராவ் நேற்று அறி​வித்​தார். இதன்​படி சிண்டு உட்பட 5 பேருக்​கும் தூக்கு தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

அனு​ராதா, கட்​டாரி மோக​னின் வாரிசு​தா​ரர்​களுக்கு ரூ.50 லட்​சம் இழப்​பீடு, தடுக்க வந்து காயமடைந்த வேலூரி சதீஷ் என்​பவருக்கு ரூ. 20 லட்​சம் இழப்​பீடு என ரூ.70 லட்​சத்தை சிண்டு வழங்க வேண்​டும் என்​றும் நீதிபதி தீர்ப்​பளித்​தார். குற்​ற​வாளி​கள் 5 பேருக்கும் நேற்று மருத்​துவப் பரிசோதனை நடத்​தப்​பட்டு கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக 144 தடை உத்​தரவு அமல்​ செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT