ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு 
இந்தியா

மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

என்.மகேஷ்குமார்

அமராவதி: ‘‘மோந்தா புய​லால் ஆந்​திர மாநிலத்​தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது’’ என்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

ஆந்​திர மாநிலம், நரசாபுரம் அருகே செவ்​வாய்க்​கிழமை நள்​ளிரவு மோந்தா புயல் கரையை கடந்​தது. இதன் தாக்​கத்​தால் ஆந்​தி​ரா​வில் பல மாவட்​டங்​களில் அதி​க​மான பயிர்​கள் நாசமடைந்​தன. நூற்​றுக்​கணக்​கில் கால்​நடைகள் இறந்தன. இன்​ன​மும் பிர​காசம், ஓங்​கோல், கோனசீ​மா, விசாகப்​பட்​டினம் ஆகிய மாவட்​டங்​களில் மக்​கள் வெள்ள பாதிப்​பால் தவித்து வரு​கின்​றனர். பலர் வீடு​களை இழந்து வாடு​கின்​றனர். முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆந்​திர அரசு தரப்​பில் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்​கப்​பட்​டு, அத்​தி​யா​வசிய பொருட்​களும் இலவச​மாக வழங்​கப்​பட்​டன.

ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாண், கிருஷ்ணா மாவட்​டம், ஆவினிகட்டா தொகு​தி​யில் உள்ள கோடூரு கிராமத்​தில் வெள்​ளம் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை நேற்று ஆய்வு செய்​தார். இந்​நிலை​யில், அமராவ​தி​யில் உயர் மட்ட அதி​காரி​களு​டன் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

மோந்தா புயல் கரையை கடந்​து​விட்​டது. எனினும், கட்​டிடம் மற்​றும் சாலை மேம்​பாட்டு துறை சார்​பில் ரூ.2,079 கோடி, வேளாண் துறை சார்​பில் ரூ.829 கோடி, தோட்​டக்​கலை துறை சார்​பில் ரூ.39 கோடி, பட்டு நூல் துறை சார்​பில் ரூ.65 கோடி என மொத்​தம் ரூ.5,265 கோடி அளவுக்கு உள்​கட்​டமைப்​பு​களுக்கு இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

ஹுத் புயல் விசாகப்​பட்​டினத்தை தாக்​கிய​போது கிடைத்த அனுபவத்​தால், தற்​போது மோந்தா புயல் விஷ​யத்​தி​லும் தொழில்​நுட்​பத்தை உபயோகப்​படுத்தி அதிக பாதிப்பு இல்​லாமல் பார்த்துக் கொண்​டோம். இதில் கடின​மாக உழைத்த மின் வாரி​யம், போலீஸ், தீயணைப்​பு, துப்​புர​வு, வரு​வாய்த் துறை​யினருக்கு எனது வாழ்த்​துக்​கள்​. இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.

SCROLL FOR NEXT