புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக 10 மாநிலங்களில் இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான அறிவிப்பை இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்டவை இந்த முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.