இந்தியா

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார்.

இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது இருதரப்பு கூட்​டாண்​மைக்கு இந்த சந்​திப்பு புதிய உத்​வேகத்தை ஏற்​படுத்​தும் என அவர் தெரிவித்தார்.

வர்த்​தகம், எரிசக்​தி. தொழில்​நுட்​பம், விவ​சா​யம் மற்​றும் மக்​களுக்கு இடையி​லான உறவில் இரு​ நாடு​களுக்​கும் இடையி​லான மேம்​பட்ட ஒத்​துழைப்​பின் முக்​கி​யத்​து​வம் குறித்து அனிதா ஆனந்​திடம் பிரதமர் எடுத்​துரைத்​தார். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சந்​திப்பு குறித்து ஆனந்த் தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளியிட்ட பதிவில், “டெல்​லியில் பிரதமர் நரேந்திர மோடி​யுட​னான சந்​திப்​பின்​போது, சட்ட அமலாக்​கம், பாது​காப்​பு, பொருளா​தார ஒத்​துழைப்பை விரிவுபடுத்​து​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. ஜி7 உச்சி மாநாட்​டில் கனடா பிரதமர் மார்க் கர்​னி​யுடன் பிரதமர் மோடி நடத்​திய பேச்​சு​வார்​தைக்​குப் பிறகு இருதரப்பு உறவில் குறிப்​பிடத்​தக்க அளவுக்கு முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

முன்​ன​தாக கனடா வெளி​யுறவு அமைச்​சர் அனிதா ஆனந்த் ஞாயிற்​றுக்​கிழமை டெல்லி வந்​தடைந்த நிலை​யில், அவர் வெளி​யுறவு அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கரை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, சர்​வ​தேச பொருளா​தா​ரத்தை ஆபத்​திலிருந்து விடு​விப்​ப​தற்கு மட்​டுமல்​லாமல், இருதரப்பு ஒத்​துழைப்பை மீண்​டும் கட்​டி​யெழுப்​பும் செயல்​முறையை மேம்​படுத்த இரு நாடு​களும் நீண்ட மற்​றும் ஆழமான உறவு​களை உரு​வாக்க வேண்​டும் என்று ஜெய்​சங்​கர் அனிதா ஆனந்​திடம் வலி​யுறுத்​தி​னார்.

கடந்த மே மாதம் வெளி​யுறவு அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற பிறகு அனிதா ஆனந்த் இந்​தி​யா​வுக்கு மேற்​கொள்​ளும் முதல் பயணம்​ இது​வாகும்.

SCROLL FOR NEXT