தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். | படம்: பிடிஐ | 
இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சி.பி.ஆர்.

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் (74), உடல்​நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப்​டம்​பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தமிழகத்​தைச் சேர்ந்​தவரும் மகா​ராஷ்டிர ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்வு செய்தது. இதையடுத்து, சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். இது தொடர்​பான புகைப்​படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்துள்ளார்.

அத்​துடன், “குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தேன். அவரின் நீண்​ட​கால பொது சேவை​யும் பல துறை​களில் பெற்ற அனுபவ​மும் நம் நாட்டை பெரிதும் வளப்​படுத்​தும். இது​வரை காட்டி வந்த அதே அர்ப்​பணிப்பு மற்​றும் உறு​தி​யுடன் அவர் தொடர்ந்து நாட்​டுக்கு சேவை செய்​யட்​டும் என வாழ்த்​துகிறோம்” என பதி​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT