கோப்புப்படம் 
இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

என். மகேஷ்குமார்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிபந்தனைகளுக்கு மாறாக போலி சான்றிதழ்கள் கொடுத்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேற்று மதத்தை சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, எஸ்சி, எஸ்டி என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பிரச்​சினை எழவே, சில ஆண்​டு​களுக்கு முன்பு திருப்​பதி தேவஸ்​தானம் தனி​நபர் ஒப்​புதல் படிவத்தை அனைத்து ஊழியர்​களிட​மும் கேட்டு வாங்​கியது. அதன்​படி அனை​வரும் தாங்​கள் இந்​துக்​கள்​தான் என கையொப்​பமிட்டு படிவத்தை நிரப்பி கொடுத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சியை தொடர்ந்​து, சந்​திர​பாபு நாயுடு​வின் ஆட்சி வந்​ததும், அதி​காரி​களும், அறங்​காவலர் குழு​வும் மாறியது. இந்​நிலை​யில், இந்​துக்​கள் அல்​லாத வேற்று மதத்​தைச் சேர்ந்த ஊழியர்​களை அகற்ற தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு 22 வேற்று மத ஊழியர்​கள் பணியிடை
நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

கடந்த வாரம் புத்​தூரில் உள்ள தேவால​யத்​தில் பிரார்த்​தனை செய்​தது தெரிய​வர​வே, ஒரு அதி​காரியை பணியிடை நீக்​கம் செய்​தனர். இதனை தொடர்ந்​து, நேற்று எலி​சார் எனும் குவாலிட்டி கண்ட்​ரோல் பொறி​யாளர், தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான ‘பேர்ட்’ மருத்​து​வ​மனை​யில் தலைமை செவிலிய​ராக பணி​யாற்றி வந்த ரோஸி, பிரே​மாவ​தி, ஆயுர்​வேத பார்​மஸி​யில் பணி​யாற்றி வந்த டாக்​டர் அஷுந்தா ஆகிய 4 பேரை தேவஸ்​தானம் பணியிடை நீக்​கம் செய்​துள்​ளது. இவர்​கள் குறித்து மேலும் விசா​ரணை நடத்தி நிரந்தர பணியிடை நீக்​கம் செய்​ய​வும் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT