கோப்புப் படம் 
இந்தியா

ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழு​வதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​யில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி​யும் மற்ற பகு​தி​களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி​யும் மக்கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்​கப்​படுகிறது.

இது தொடர்​பாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் மற்​றும் பதி​வாளர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நாட்​டிலேயே முதல் முறை​யாக டிஜிட்​டல் முறை​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும்.

செல்​போன் செயலி மூலம் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் தகவல் சேகரிக்​கப்​படும். கணக்​கெடுப்​பாளர்​கள்​, மேற்பார்​வை​யாளர்​கள் தரவு​களை சேகரிக்க தங்​கள் சொந்த செல்​போனை பயன்​படுத்​து​வார்​கள். அதே​நேரம் பொது​மக்​கள் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான தகவல்​களை தாங்​களே பதிவு செய்ய ஏது​வாக ஒரு இணை​யதளம் தொடங்​கப்​படும்” என கூறப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT