இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்தால் சந்திரபாபு அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து

என்.மகேஷ்குமார்

அமராவதி: அகம​தா​பாத்​தில் ஏர் இந்​தியா விமான விபத்து குறித்து அறிந்​ததும், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று நடை​பெற இருந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்​டத்தை ரத்து செய்​வ​தாக அறி​வித்​தார்.

ஆந்​தி​ரா​வில் சந்​திர​பாபு நாயுடு தலை​மையி​லான கூட்​டணி அரசு ஏற்​பட்டு நேற்​றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதன் காரண​மாக நேற்று மாலை ‘ஸ்​வர்​ணாந்​தி​ரா​வின் நல்​லாட்​சி’ எனும் பெயரில் மாபெரும் ஒராண்டு சாதனை விளக்க கூட்​டம் நடை​பெற இருந்​தது.

இக்​கூட்​டத்​தில் ஓராண்டு கால ஆட்​சி​யின் சாதனை​கள் மட்​டுமல்​லாது, இனி வர இருக்​கும் 4 ஆண்டு கால வளர்ச்சி திட்​டங்​கள் குறித்​தும் அறிவிக்க இருந்​தது.

இதற்​காக அமராவ​தி​யில் அனைத்து ஏற்​பாடு​களும் மிக சிறப்​பாக செய்​யப்​பட்​டிருந்​தன. ஆனால், அகம​தா​பாத் விமான விபத்​தால் இதனை ரத்து செய்ய நேரிட்​டது. இது குறித்து சந்​திர​பாபு நாயுடு கூறுகை​யில், “அகம​தா​பாத் ஏர் இந்​தியா விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்​தேன். மீளாத்​துயர் கொண்​டேன். இதில் உயிர் நீத்​தவர்​களின் ஆன்மா சாந்தி அடைய வேண்​டு​கிறேன்.

அவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு என்​னுடைய ஆழ்ந்த இரங்​கல்​களை​யும் தெரி​வித்து கொள்​கிறேன்” என கூறி​னார். இதே​போன்று ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாண், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, முன்​னாள் முதல்​வர் கே.சந்​திரசேகர ராவ் உள்​ளிட்​டோரும் அகம​தா​பாத் விமான விபத்​துக்கு தங்​களின் அதிர்ச்​சி​யை​யும், ஆழ்ந்த அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT