இந்தியா

சர்வதேச புக்கர் விருதை வென்றார் கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக்

இரா.வினோத்

பெங்களூரு: ‘ஹார்ட் லாம்ப்' சிறுகதை தொகுப் ​புக்​காக கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் சர்​வ​தேச அளவில் புகழ்பெற்ற‌ புக்​கர் விருதை வென்​றுள்​ளார். இந்த விருது முதல் முறை​யாக சிறுகதை தொகுப்​புக்​காக வழங்​கப்​பட்டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. கர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் மாவட்​டத்தை சேர்ந்த பானு முஸ்​தாக் சிறு​வய​தில் இருந்தே வாசிப்​பின் மீது அதிக ஆர்​வம் கொண்​டிருந்​தார். தனது தந்​தை​யின் வாயி​லாக நூல்​களின் அறி​முகத்தை பெற்ற அவர், கல்​லூரி காலத்​தில் சிறுகதைகள் எழுத தொடங்​கி​னார்.

1990 முதல் 2023-ம் ஆண்டு​ வரை அவர் கன்​னடத்​தில் எழு​திய சிறுகதைகள் ‘ஹார்ட் லாம்ப்’ (இதய விளக்​கு) என்ற பெயரில் ஆங்​கிலத்​தில் தொகுப்​பாக வெளிவந்​தது. இதனை தீபா பஸ்தி ஆங்​கிலத்​தில் மொழிப்​பெயர்த்​திருந்​தார். தற்​போது இரு​வருக்​கும் சர்​வ​தேச புக்​கர் பரிசு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விரு​தின் பரிசு தொகை ரூ.57.33 லட்​ச​மாகும். இது இரு​வருக்​கும் சமமாக பங்​கிட்டு கொடுக்​கப்​படும். கன்னட எழுத்​தாளர் ஒருவர் இந்த விருதை பெறு​வது இதுவே முதல் முறை என்​ப​தால், முதல்​வர் சித்​த​ராமையா எழுத்​தாளர் பானு முஸ்​தாக்​கிற்​கு வாழ்த்துகளை தெரிவித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT