இந்தியா

இஸ்ரோவின் இஓஎஸ்-09 செயற்கைக்கோள் இரவிலும் பூமியை படம்பிடிக்கும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவன் விண்​வெளி மையத்​தில் இருந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலம் புதிய ரேடார் செயற்​கைக்​கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்​ணில் செலுத்​தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்​கைக்​கோள் 1,696 கிலோ எடை கொண்​டது. பூமி​யில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்​தில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இஸ்​ரோ​வின் 101-வது ராக்​கெட் இதனை விண்​ணில் செலுத்தியது.

உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்ட இந்த செயற்​கைக்​கோள், பெங்​களூரு​வில் உள்ள இஸ்​ரோ​ மையத்​தில் வடிவ​மைக்​கப்​பட்​டது.

இந்த ரேடார் செயற்​கைக்​கோள் அனைத்து காலநிலை​யிலும் குறைந்த வெளிச்​சத்​தி​லும் பூமி​யின் மேற்​பரப்பை தெளி​வாக படம்​பிடிக்​கக் கூடியது. இது நாட்​டின் செயற்​கைக்​கோள் அடிப்​படையி​லான கண்​காணிப்பு திறனுக்கு மேலும் பலம் சேர்க்​கும் என கூறப்​படு​கிறது.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக ‘ஆபரேஷன் சிந்​தூர்' என்ற பெயரில் மத்​திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்​தது. இதையடுத்து இந்​தியா -பாகிஸ்​தான் இடையே சண்டை நிறுத்த உடன்​பாடு ஏற்​பட்​டு,எல்​லை​யில் அமைதி நிலவி வரு​கிறது. என்​றாலும் மத்​திய அரசு விழிப்​புடன் இருந்​து​வரும் நிலை​யில் இந்த செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது.

விண்​வெளி​யில் இந்​தியா ஏற்​கெனவே நிலைநிறுத்​தி​யிருக்​கும் 57-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​கோள்​களின் தொகுப்​பில் இஓஎஸ்-09 கூடு​தலாக இடம்​பெறும். மேலும் எல்​லையை கண்​காணிக்​கும் 5-வது செயற்​கைக்​கோளாக இது இருக்​கும்.

இதுகுறித்து இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறுகை​யில், “நாட்​டின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 10 செயற்​கைக்​கோள்​கள் 24 மணி நேர​மும் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த நாடு தனது 7,000 கி.மீ. கடற்​கரைப் பகு​தி​களை​யும் ஒட்​டுமொத்த வடக்​குப் பகு​தி​யை​யும் கண்​காணிக்க வேண்​டும். செயற்​கைக்​கோள் மற்​றும் ட்ரோன் தொழில்​நுட்​பம் இல்​லாமல் நாடு இதனை சாதிக்க முடி​யாது’’ என்​றார். மத்​திய விண்​வெளி தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறுகை​யில், “துல்​லி​யம், குழுப்​பணி, பொறி​யியல் சக்தி ஆகியவை இந்​தி​யா​வின் விண்​வெளி லட்​சி​யங்​களை வலுப்​படுத்​துகின்​றன’’ என்​றார்​.

SCROLL FOR NEXT