இந்தியா

அவதூறு வழக்கில் திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலே சம்பளத்தை பிடித்தம் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அவதூறு வழக்கில் திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலேவின் சம்பளத்தை பிடித்தம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.நா முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் லட்சுமி புரிக்கு ஜெனிவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொடர்பு படுத்தி பொய்யா நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளை திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். இதையடுத்து லட்சுமி புரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சாகேத் கோகலே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் லட்சுமி புரியிடம் மன்னிப்பு கோரவும், அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் இந்த அபராதத் தொகையை வழங்கவும் இல்லை, நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் இல்லை.

இதனால் ரூ.50 லட்சத்தை அவர் நீதிமன்றத்தில் செலுத்தும்வரை அவரது சம்பளத் தொகை ரூ.1.90 லட்சத்தை பிடித்தம் செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்பீத் பிரீத்தம் சிங் அரோரா உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT