மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மீண்டும் அசம்பாவித சம்பவம் ஏற்படாத வகையில் கூட்ட நெரிசலை சமாளிக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி குதித்து வெளியேறும் பெண் பக்தர்கள். 
இந்தியா

மகா கும்பமேளா நெரிசல்: உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் புனித நீராட முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு உத்தர பிரதேச அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “மவுனி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் உ.பி. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. விஐபி கலாச்சாரத்தின் விளைவால் ஏற்பட்ட துயரம் இது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது. சாமானிய பக்தர்களின் தேவையை ஈடுசெய்ய சிறந்த ஏற்பாடுகளை மாநில நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும். மகா கும்பமேளாவில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமைடந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்றார்.

சமாஜ்வாதி கட்சி​யின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்​போது, ” மகா கும்​பமேளா​வில் நிர்வாக குளறு​படிகளின் காரணமா
கவே இந்த விபத்து நிகழ்ந்​துள்ளது. காயமடைந்​தோருக்கு விரைவான உயரிய சிகிச்சை வழங்​கு​வதுடன், இறந்​தவர்​களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்​களிடம் ஒப்படைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். பாது​காப்பை பலப்​படுத்த வேண்​டும்” என்றார்.

காங்​கிரஸ் கட்சி​யின் தலைவர் மல்லி​கார்ஜூன கார்கே கூறுகை​யில், ‘‘மகா கும்​பமேளா​வில் அரைகுறையான ஏற்பாடு​கள், விஐபி-க்​களுக்கு அதிக முக்​கி​யத்து​வம். நிர்​வாகத்தை விட சுயவிளம்​பரத்​தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்​தியது போன்றவை இந்த விபத்​துக்கு முக்கிய காரண​மாகி விட்​டது. பல ஆ​யிரம் கோடி ரூபாய் செல​வழித்தும் பக்​தர்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யானது கண்​டிக்​கத்​தக்​கது” என்​றார்​.

SCROLL FOR NEXT