பிரியங்கா காந்தி | கோப்புப் படம். 
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றியை நோக்கி முன்னேறும் பிரியங்கா காந்தி

செய்திப்பிரிவு

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.

வயநாட்டில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 617942 வாக்குகள் பெற்றுள்ளார். வகிக்கிறார். அமோக வெற்றியை நோக்கி அவர் முன்னேறி வருகிறார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி போட்டியிட அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிட்டனர். சத்யன் மொகேரி 209906 வாக்குகளும், பாஜகவின் நவ்யா 109202 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வெற்றித் தொடக்கம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

1999-ஆம் ஆண்டு அமேதியில் பாஜக வேட்பாளர் அருண் நேருவுக்கு எதிராக தனது தாயார் சோனியா காந்திக்காக பிரச்சாரம் செய்ய அரசியல் களத்துக்குள் நுழைந்தார் பிரியங்கா காந்தி. தொடர்ந்து அவர் தேர்தல் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வயநாட்டில் போட்டியிட்டு வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT