கவிதா | கோப்புப்படம் 
இந்தியா

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிடம் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், தனது 16 வயது மகன் தேர்வுக்கு தயாராகி வருவதால் அவருக்கு தனது ஆதரவு தேவைப்படுவதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இதற்கான அனுமதியை வழங்கினார்.

SCROLL FOR NEXT