இந்தியா

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ்

செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் புரி​யில் உலகப் புகழ்​பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை வரும் ஜூலை 16-ம் தேதி தொடங்குகிறது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொள்​ளும் இந்த விழா​விற்​காக, தரை, கடல், ஆகா​யம் ஆகிய மூன்று மார்க்கங்​களி​லும் கண்​காணிக்​கும் விரி​வான பாது​காப்​புத் திட்டத்தை ஒடிசா காவல்​ துறை வகுத்​துள்​ளது.

இத்​திட்​டத்​தின்​படி, தரைவழி​யாகக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்​த​வும், வான்​வழி​யாகக் கண்​காணிக்க அதிநவீன ட்ரோன்​கள் மற்​றும் ட்ரோன் எதிர்ப்பு கருவி​களைப் பயன்படுத்தவும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. கடல்​வழிப் பாதுகாப்பிற்காக இந்​திய கடற்​படை, கடலோர காவல்​படை மற்றும் ஒடிசா கடல்​சார் போலீஸார் இணைந்து கப்​பல்​கள் மூலம் கூட்டு ரோந்​துப் பணியில் ஈடு​பட​வுள்​ளனர்.

மாநில டிஜிபி ஒய்​.பி. குரானியா தலை​மை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், சி.ஆர்​.பி.எஃப், பி.எஸ்​.எஃப், என்.எஸ்​.ஜி மற்​றும் ரயில்வே பாது​காப்​புப் படை (ஆர்​பிஎப்) ஆகிய மத்​திய படைகளை ஒருங்​கிணைத்து பாது​காப்​புப் பணி​களை மேற்​கொள்ள முடி​வெடுக்​கப்​பட்​டது. 9 நாட்​கள் நடை​பெறும் இந்த ரத யாத்திரை திரு​விழா​வுக்​கு, எவ்​விதப் பாது​காப்பு குறை​பாடும் இன்​றிப் பாது​காப்​பைப் பலப்​படுத்த மொத்​தம் 12,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ள​னர்.

SCROLL FOR NEXT