இந்தியா

உணவு தேவையில் இந்தியா தன்னிறைவு பெற்றதில் எஃப்சிஐ வரலாற்று சாதனை: பியூஷ் கோயல் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த நிலையை மாற்றி அமைத்து, இந்தியாவின் உணவுத்தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யும் நோக்கில், அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அரசு, 1965-ம்ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) உருவாக்கியது. இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது.

இந்தக் கழகம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உணவுக் கழகத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது. உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, ஏழை மக்களுக்கு விநியோகிப்பதில் அதன் சாதனை வரலாற்று முக்கியத்துவமிக்கது. இந்தக் கழகம் வழியே இந்தியாவின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT