இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உரி செக்டார் பகுதி வாயிலாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "உரி பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை காவல்துறை டிஜிபி எஸ்.பி.வேத் உறுதி செய்துள்ளார்" என்றார்,

SCROLL FOR NEXT